tamilnadu

img

மாட்டு வண்டிகளுக்கு தென்பெண்ணையில் மணல் குவாரி: அதிகாரி பேச்சு

புதுச்சேரி,ஆக.26-  புதுச்சேரியில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் எடுக்க அனுமதி வழங்கக் கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாட்டு வண்டித் தொழிலா ளர்கள் பாகூர் அருகே தென்பெண்னை ஆற்றில் மணல் குவாரிகளை அமைத்து, மணல் அள்ளுவ தற்கு அனுமதி வழங்க வேண்டும். மாட்டு வண்டித்  தொழிலாளர்கள் மீது போடப்  பட்டுள்ள பொய் வழக்கு களை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தலை மையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் எதிரில் நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு சிஐடியு   மாட்டு வண்டித் தொழிலா ளர்கள் சங்கத்தின் பிரதேச தலைவர் ஜி.சீனுவாசன் தலைமை தாங்கினார். சிஐ டியு பிரதேசத் தலைவர் கே. முருகன் துவக்கி வைத்தார். சிபிஎம் பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், மூத்தத் தலைவர் தா.முருகன், சிஐடியு நிர்வாகிகள் ஆர். பிரபுராஜ், குணசேகரன், மதிவாணன், கலியமூர்த்தி, கலியன், மணிபாலன், சிவா னந்தம், செல்வராசு ஆகி யோர் கோரிக்கைகள் வலி யுறுத்தி பேசினர்.

பேச்சுவார்த்தை

போராட்டத்தில் பங்  கேற்ற சிஐடியு தலைவர்களி டம் குடிசை மாற்று வாரி யத் தலைமை பொறியாளர்  நடத்திய பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்டதை  தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப் பட்டதாக சிஐடியு தலை வர்கள் தெரிவித்தனர்.