சென்னை புத்தக வாசிப்பு நிகழ்ச்சியில் கவிஞர் சல்மா பேச்சு
சென்னை, பிப். 21- கம்யூனிஸ்ட் அறிக்கை வாசிப்பு விழா சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சிங்காரவேலர் சிலை அருகே மத்திய சென்னை மாவட்டச் செயலா ளர் ஜி.செல்வா தலைமையில் வியாழ னன்று (பிப். 20) நடைபெற்றது. புத்தக வாசிப்பு இயக்கத்தை மூத்த தோழர் வே.மீனாட்சி சுந்தரம் துவக்கி வைத்தார். பேராசிரியர் அ.மங்கை தலை மையிலான குழுவினர் கம்யூனிஸ்ட் அறிக்கையை வாசித்தனர். மாநிலக் குழு உறுப்பினர் க.நாகராஜன் தமிழ கத்தில் சிறப்பு புத்தக தினம் குறித்து பேசினார்.
கவிஞர் சல்மா
கவிஞர் சல்மா பேசுகையில், உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என அறைகூவல் விடுத்த அந்த கம்யூ னிஸ்ட் சித்தாந்தமும், பெரியாரிய சித்தாந்தமும் என்னை இளம்வயதில் ஈர்த்தது. இளைஞர்களை ஈர்க்க வேண் டும் என்றால் கம்யூனிஸ்ட் சித்தாந் தத்தை தவிர வேறு எந்த சித்தாந்தத்தா லும் முடியாது. லெனின், மார்க்ஸ், சேகுவேரா, பிடல்காஸ்ட்ரோ குறித்து எனக்கு நிறைய கற்பனைகள் உண்டு. கம்யூனிஸ்ட் சித்தாந்தம் சம உரிமை, சமத்துவத்தை பற்றி பேசுகிறது. நான் நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என நினைத்த பல தலை வர்களை பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் எனக்கு உண்டு. என்னுடைய சம காலத்தில் இருந்த தலைவர் பிடல் காஸ்ட்ரோ பார்க்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் பார்க்க முடிய வில்லையே என்ற ஏக்கம் எனக்கு இப்போது உண்டு. அமெரிக்க ஏகாதிய பத்தியத்திற்கு எதிராக தன்னுடைய குரலை தொடர்ந்து ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தார். கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை இறுதிவரை உயர்த்திப் பிடித்து வாழ்ந்த தலைவர். கலைஞரும் அவரை பார்க்க வேண்டும் என்று விரும்பினார்.
பணக்காரர்கள் தொழிலாளர்களை சுரண்டுவதற்கு அதிகாரமில்லை எனக் கூறுகிறது கம்யூனிஸ்ட் சித்தாந்தம். ஒரு தொழிலாளி இன்று வேலைக்கு வந்தால், அவன் மீண்டும் நாளை வேலைக்கு வந்தால்தான் அவன் உழைப்பை சுரண்ட முடியும் என்ப தற்காக கொடுக்கப்படுவதுதான் ஊதி யம். தொழிலாளர்களை ஒருங்கி ணைக்க வேண்டும், அவர்களின் வேலை பளுவை குறைக்க வேண்டும், விடு முறை நாட்கள் அறிவிக்க வேண்டும், மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என பல்வேறு விஷ யங்கள் இந்த கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் மூலம் நிறைவேறி யிருக்கிறது என்று கூறலாம். பிரிட்டிஷ் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் ஒருமுறை கூறினார், நாம் மக்களுக்கு தொழிலாளர்களுக்கு நீதியை வழங்கவில்லை என்றால் அவர்கள் நமக்கு புரட்சியை வழங்கு வார்கள் என்றார். அதுதான் இன்று நடை பெற்றுக் கொண்டிருக்கும் சிஏஏ போராட்டத்தின் அடிப்படையான விஷ யம். அப்போதே காரல் மார்க்ஸ் நம்மு டைய நாட்டின் சாதிய அடுக்குகள் வேரூன்றி போயிருக்கிறது என்றும், அது எந்தளவுக்கு மக்களை தாழ்த்தி யிருக்கிறது என்றும் கூறியிருப்பார். அது தான் பெரியாரின் போராட்டத்திற்கு உந்து சக்தியாக இருந்தது. சமத்துவ புரங்களை உருவாக்க வேண்டும் என்று கலைஞர் சிந்தித்தற்கும் அது தான் காரணம் என்றார்.
மனிதர்கள் அனைவரும் சமம், சமத்துவத்தை, சமமான உரிமை, சம மான வாழ்க்கை என்று கூறும் கம்யூனிச சித்தாந்தத்திற்கு நேர் எதிரான சித்தாந்தம் இன்று நாட்டில் பரவி வரு கிறது. அப்படிப்பட்ட சித்தாந்தத்தை கொண்டவர்களின் ஆட்சி மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த சித்தாந்தங்களை வலிமையாக எதிர்க்கக் கூடிய சித்தாந்தாம் கம்யூ னிஸ்ட், திராவிட சித்தாந்தாம் மட்டும் தான் என்றார் சல்மா. கேரளாவில் கம்யூனிச சித்தாந்தங் களை கொண்ட ஒரு சிறப்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மத்தியிலும் இந்த சித்தாந்தம் ஆட்சிக்கு வர வேண்டும். ஆர்.எஸ்.எஸ்., பாஜக சித்தாந்தங்களை கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தால் மட்டும்தான் ஒழிக்க முடியும். இந்த சித்தாந்தம் வெல்ல வில்லை என்றால் வேறு எந்த சித்தாந்த மும் வெல்ல முடியாது என்றார். அரசியல் தலைமைக் குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், உலக வரலாற்றில் கிறித்து பிறந்த தற்கு முன், கிறித்து பிறந்ததற்கு பின் என்று கூறுவதைப் போல மார்க்ஸ் பிறந்ததற்கு முன், மார்க்ஸ் பிறந்த தற்கு பின் என திருத்தி அமைக்கக் கூடிய வகையில் இந்த அறிக்கை புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது. நவீனகால அரசின் நிர்வாக அமைப்பா னது ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தின் நலனுக்காக பாடுபடும் என்று 172 ஆண்டுகளுக்கு முன்பு வெளி யிடப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை கூறுகிறது. 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அரசு பள்ளிகளை மூடக் கூடாது என்றும் நாடே போராடிக் கொண்டி ருக்கிறது. பொது பள்ளிக்கூடங்களில் அனைத்து குழந்தைகளுக்கும் இல வச கல்வி அளிக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை கூறுகிறது. ஆனால் 20 மாணவர்களுக்கு குறை வாக இருந்தால் அந்த பள்ளியை மூட வேண்டும் என மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை கூறுகிறது. தமிழ கத்தில் ஒரு அரசுப் பள்ளியை கூட மூட அனுமதிக்க மாட்டோம் என்றார்.
பிரின்ஸ் கஜேந்திரபாபு
கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசுகையில், லேடி வெலிங்டன் வளாகத்தில் சிங்கார வேலர் சொத்து இருக்கிறது, நினைவ கம் இருக்கிறது. வழக்கறிஞரான சிங்காரவேலர் ஒருநாள் கூட முத லாளிகளுக்கு ஆதரவாக தன்னுடைய கருத்தை, உழைப்பை செலுத்தியது கிடையாது. முழுக்க முழுக்க உழைப்பாளி மக்களுக்காக மட்டுமே வாதிட்டார். தந்தை பெரியாரின் சுயமரி யாதை இயக்கத்தின் வலதுகரமாகவும் இடதுகரமாகவும் இருந்தவர்கள் சிங்காரவேலரும், ஜீவாவும். 2500 ஆண்டுகளுக்கு முன்பு காரல் மார்க்ஸ் இருந்திருந்தால் அவர்தான் புத்தார் என்று அம்பேத்கர் கூறுகிறார். தந்தை பெரியார் செய்த சாதனைகள் இரண்டு. ஒன்று திருக்குறள் மாநாடு, மற்றொன்று காரல் மார்க்ஸ் வெளியிட்ட கம்யூனிஸ் அறிக்கையை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து இரண்டு அத்தியா யங்களை தமிழர்களுக்கு அறிமுகப்ப டுத்தியது. உழைக்கின்ற மக்களின் விடு தலைக்கான ஆயுதமாக கம்யூனிஸ்ட் அறிக்கை விளங்குகிறது என்றார். முன்னதாக பகுதிச் செயலாளர் கே.தாமோதரன் வரவேற்றார். கிளைச் செயலாளர் கே.ராமமூர்த்தி நன்றி கூறி னார். முன்னதாக சிங்காரவேலர் சிலைக்கு ஜி.ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஜென்னி மார்க்ஸ் கலைக்குழுவின் பறையாட்டமும், விஜய், நிகவிட்ரன் ஆகியோர் இன்றைய அரசின் நிலை குறித்து பாடிய பாடல்கள் அனைவரை யும் வெகுவாக கவர்ந்தன.