tamilnadu

உணவகங்களில்  பழைய கட்டணமே தொடரும் ஓட்டல் உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

சென்னை, ஜூன் 8-  தமிழகம் முழுவதும் உணவகங்களில் பழைய கட்டணமே தொடரும் என்று ஓட்டல் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஜூன் 8 முதல் உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ள அரசு, 50  விழுக்காடு இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்  என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அறி வித்துள்ளது. இதனால் உணவு கட்டணம் உயர்த்தப்பட உள்ள தாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் ‘‘தமிழகம் முழுவதும் உணவகங்களில் பழைய கட்டணமே தொடரும். உணவு கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக வெளியாகும் தகவல் உண்மை இல்லை’’ என  ஓட்டல் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.