தீக்கதிர் வேலூர் மாவட்ட நிருபராக திறம்பட பணியாற்றிய தோழர் ஹென்றியின் படத்திறப்பு விழா ஞாயிறன்று (நவ. 17) சென்னையில் தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட் சார்பில் நடைபெற்றது. கே. ஹென்றியின் படத்தை சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் திறந்து வைத்தார். பொதுச் செயலாளர்கள் போளூர் சுரேஷ், கே.முத்து, பொருளாளர் ரவிச்சந்திரன், அமைப்புச் செயலாளர் பி.ஆர்.பி.சுப்பிரமணி, நிர்வாகிகள் மணிவாசகம், சாகுல் அமிது, ஜி.கே.ஸ்டாலின், பி.ஆர்.வேலாங்கன், முருககனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின்னர் நடந்த சங்கத்தின் விரிவடைந்த மாநில நிர்வாகக்குழு கூட்டத்தில் தோழர் ஹென்றி குடும்பநிதி வழங்கப்பட்டது.