புதுவை பல்கலைக்கழகத்திற்கு ஜூன் 7,8,9ல் நுழைவுத்தேர்வு
புதுச்சேரி, மே 31- ஜூன் 7, 8, 9 தேதிகளில் புதுவை பல்கலைக் கழக நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. இதுகுறித்து புதுவை பல்கலைக்கழகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-புதுவைப் பல்கலைக்கழகம் 2019-2020 ஆம் ஆண்டிற்கான நுழைவுத் தேர்வு இந்தியாவின் 33 நகரங்களில் உள்ள 64 மையங்களில் வருகின்ற ஜூன் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதும் 41,160 பேர் எழுத உள்ளனர்.புதுவை பல்கலைக் கழகம் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் புதுவை காலாப்பட்டில் இயங்கி வருகிறது. இங்கு தமிழ், மேலாண்மை, கணிதவியல், அறிவியல், பசுமை பொறியியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட 14 புலங்கள் மூலம் பல்வேறு துறைக ளும், பிரிவுகளும் பல்கலைக்கழக வளாகம், காரைக்கால், மாகே மற்றும் அந்தமான் நிகோபார் பகுதிகளில் இயங்கி வருகின்றன.2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு பல்கலைக் கழக நிர்வாகத்தின் மூலம் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. மே 10 ஆம் தேதியோடு விண்ணப்பிக் கும் தேதி முடிவு பெற்றது. பல்வேறு படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்காக 41,160 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் அனைவரும் வருகின்ற ஜூன் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இந்தியாவிலுள்ள ஸ்ரீநகர், மும்பை, பெங்களூர், கொல்கத்தா, திருவனந்தபுரம், சென்னை மற்றும் புதுவை உள்ளிட்ட 33 நகரங்களில் 64 மையங்களில் நடைபெறவுள்ள நுழைவுத் தேர்வை எழுதவுள்ளனர்.பல்கலைக்கழக படிப்புகளுக்காக விண்ணப்பித்துள்ள மாணவர்கள் றறற.றறற.யீடினேரைni.நனர.in சென்று தங்களுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தங்களுக்கு ஒதுக்கப் பட்ட தேர்வு மையம், நாள் மற்றும் நேரம் மற்றும் தேர்வு எழுதும் போது பின்பற்ற வேண்டிய கட்டாய நெறிமுறைகள் முதலான அனைத்து விவரங்களையும் பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையத்தள முகவரியில் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு: கண்டு கொள்ளாத காவல்துறை
வேலூர் மே 31-வேலூர் மாவட்டம் குட்டி சிவகாசி என்று அழைக்கப்படும் குடியாத்தம் நகரில் மூன்று நம்பர் லாட்டரி மற்றும் தடைசெய்யப் பட்ட லாட்டரி ஜெராக்ஸ் என்ற பெயரில் கூலித் தொழிலாளர் களையும், தீப்பெட்டி மற்றும் நெசவாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஏழை கூலித்தொழிலாளர்களின் குறைந்த பட்ச கூலியை இம்மாதிரி சுரண்டும் முறையான சூதாட்டம் மூலம் சுரண்டப்படுகிறார்கள். மூன்று நம்பர் லாட்டரி மற்றும் தடைசெய்யப்பட்ட லாட்டரி ஜெராக்ஸ் பெயரில் தனிநபர்கள் பரிசு குலுக்கல் என்ற முறையில் பொதுமக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். ஏழை மக்களின் வறுமையைபயன்படுத்தி, இதற்கு அடிமையாக்கி அவர்களின் குடும்பத்தை மேலும் துன்பத்தில் தள்ளுகிறது.அரசும் காவல்துறையும் இதை கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.