tamilnadu

முன்விரோதம்: மாடுகளுக்கு உணவில் விஷம்

திருவண்ணாமலை, ஆக. 23- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குருமபட்டி  கிராத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பசுமாடுகளை வளர்த்து வந்தார். பக்கத்து நிலத்திற்கு செல்லும் வழி சம்மந்த மாக தகராறு ஏற்பட்டதால்,  முன்விரோதம் இருந்துவந்த தாகக் கூறப்படுகிறது.   தான் வளர்த்து வந்த மூன்று பசுமாடுகளும் மயங்கிய நிலை யில் படுத்துக்கிடப்பதை பார்த்த மணிகண்டனும் அவரது மனைவியும் அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அழைத்து  மருத்துவம் பார்த்துள்ளனர்.  ஆனால் அதில் மூன்று பசுமாடு களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இது குறித்து, மணிகண்டன் மேல் செங்கம் காவல் நிலை யத்தில்,  பக்கத்து நிலத்து உரிமையாளர்கள் முன்விரோதம் காரணமாக, எனது மாடுகளுக்கு  விஷம் கலந்து, கொன்று விட்டதாக புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.