சென்னை, மார்ச் 25- கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்த ரவு செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) மாலை 6 மணி மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கென பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் சிறிதும் அச்சப்படாமல் 144 தடை உத்தரவை மீறி ஒரு சில இடங்களில் கும்பல் கும்பலாக கார் மற்றும் இருசக்கர வாகனங்க ளில் வலம் வருகின்றனர். இதை யடுத்து காவல் துறையினரும் போக்குவரத்து காவல்துறையினரும் பல்வேறு இடங்களில் வாகன சோத னையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை அண்ணா சாலையில் காவல்துறை உதவி ஆய்வாளர் ரஷீத் வாகன ஓட்டிகளிடம் கண்ணீர் விட்டு கதறி அழுது கை எடுத்து கும்பிட்டு, ‘நம் நாடு அழிந்து விடுமோ என்று அச்சமாக உள்ளது. நான் என் நாட்டு மக்கள் யாரையும் இழக்க விரும்பவில்லை. ஆக நீங்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருங்கள்’ என கெஞ்சி கேட்டுக் கொண்டார். அப்போது திடீரென வாகன ஒட்டி ஒருவர் உதவி ஆய்வாளர் ரஷீத் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். இந்த இரு சம்பவமும் அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
அதேபோல் சென்னை பாரி முனை, அண்ணாசாலை, தி.நகர், கோயம்பேடு, வடபழனி, அண்ணா நகர், அம்பத்தூர், வில்லிவாக்கம், அயனாவரம், பெரம்பூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட அனைத்து சாலை சந்திப்புகள் என 400க்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்புகளை அமைத்து, தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியே வரும் பொதுமக்களை வாகன சோதனை நடத்தி தேவையில்லாமல் சுற்றுப வர்களை எச்சரித்து, நோயின் தாக்கம் குறித்து அறிவுரை வழங்கி திருப்பி அனுப்பி வைத்தனர். அத்தியாவசிய வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைக்காக செல்லும் நபர்களை மட்டும் காவல் துறையினர் அனு மதித்தனர். சென்னையில் பெருங்களத்தூர் இரணியம்மன் கோயில், முட்டுக்காடு, செம்மஞ்சேரி, நசரத் பேட்டை, மணலி, எண்ணூர், செங்குன்றம், மதுரவாயில், மாம்பாக்கம் ஆகிய 9 எல்லைகளை மூடி காவல் துறையினர் கண்காணிப் பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேம்பாலங்கள் மூடல்
சென்னையில் உள்ள 38 பெரிய மேம்பாலங்களும், 75 சிறிய மேம்பாலங்களும் மூடப்பட்டன. அத்தியாவசிய பணிகளுக்கான வாகனங்கள் வந்தால் மட்டும் மேம்பாலங்கள் திறந்து விடப்படு கின்றன. இரவு முழுமையாக மேம்பாலங்களை மூடி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தவிர அனைத்து முக்கிய சாலைகளிலும் வாகனங்கள் வேகமாக இயக்கப் படுவதை தடுக்கும் வகையில் காவல் துறையினர் தடுப்புகளை அமைத்துள்ளனர்.