tamilnadu

img

பெட்ரோபுராடக்ட்ஸ் தொழிலாளர்கள் வெள்ளிவிழா கொண்டாட்டம்

சென்னை,செப்.23- தமிழ்நாடு பெட்ரோ புராடக்ட்ஸ் தொழிலாளர்கள் சங்கங்கத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சென்னை அண்ணாநகரில் ஞாயிறன்று (செப்23) கொண்டாடினர். சென்னை மணலியில் இயங்கிவரும் தமிழ்நாடு பெட்ரோபுராடெக்ஸ் தொழி லாளர் சங்கத்தின் வெள்ளி விழாவில் சங்கத்தின் தலை வர் எஸ்.மரியமைக்கேல் தலைமை தாங்கினார். கவுரவத்தலைவர்கள்  எஸ்.பரமசிவம், எஸ்.செங்கை தாமஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிர்வாகிகள்  டி.ராமு, வி.சத்தியநாதன், பி.பெருமாள்  சங்க செயல்பாடுகள் குறித்து விளக்கவுரையாற்றினர்.    திரு வொற்றியூர் பொதுத்தொழி லாளர்கள் சங்கத்தலைவர் ஆர்.ஜெயராமன், பால்மர் லாறி தொழிற்சங்கம் மற்றும் மணலி தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் ஜி.கண்ணன், சிபிசிஎல் பொதுச்செயலாளர் ஜி.வைத்தியலிங்கம்,   தொழிற்சங்கத்தலைவர்கள் பி.குங்குமேஸ்வரன்(ஐஓஎஸ்ஆர்பிஇயூ), கருப்பையா (டிபிஎல்), கே.ரமேஷ் (கோத் தாரி), பி.ஆர்.சங்கர் (எஸ்ஆர்எப்), சதீஷ்குமார் (சிடெக்ஸ்) ஆகியோர் பங்கேற்று பேசினர். விழாவில் கோத்தாரி பெட்ரோ கெமிக்கல் தொழி லாளர்கள் கலைக்குழு சார்பில் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. தொழிற்சங்கப்பணியை சிறப்பாக செய்த நிர்வாகிகள் பாராட்டுப்பெற்றனர்.