சென்னை, ஜூன் 3-கோடை விடுமுறைக்குப் பின், மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிவுக்கு வந்த நிலையில், அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகள் திங்களன்று(ஜூன் 3) திறக்கப் பட்டுள்ளன. மாணவர்களுக்கு விலையில்லாப் பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள் ளது. இந்த ஆண்டு ஒன்று முதல் 8 ஆம் வரை வகுப்பு மாணவர்களுக்கு புதிய சீருடைகள் வழங்கப்பட உள்ளன.ஏற்கனவே கொடுத்த இலவச பேருந்து அட்டைகள் மூலமாக மாணவ- மாணவிகள் பயணிக்கலாம் என போக்குவரத்துத்துறை தெரிவித்திருக்கிறது. புதிதாக இலவச பேருந்து அட்டை வழங்கும் வரை இந்த பழைய அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், இது தொடர்பாக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு தெரியப்படுத்தப் பட்டுள்ளதாகவும், போக்குவரத்துத்துறை கூறியிருக்கிறது. பள்ளி மாணவ, மாணவிகள், சீருடை அணிந்து பயணித்தாலே, டிக்கெட் எடுக்க வேண்டிய அவசிய மில்லை என்றும், போக்குவரத்துத் துறை தெரிவித்திருக்கிறது.வேலை வாய்ப்பு அலுவலக ஊழியர்கள் நேரடியாக பள்ளிகளுக்கு வந்து, 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவும் செய்கின்றனர்.