ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி சோத்துப்பாக்கத்தில் நூதன போராட்டம்
மேல்மருவத்தூர், பிப்.23- செய்யூர் வந்தவாசி சாலையில் ரயில்வே இருப்பு பாதையை கடக்கும் இடத்தில் நிதி ஒதுக்கியும் மேம்பாலம் கட்டப்படாமல் இருப்பதை கண்டித்து பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த வர்கள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், சோத்துப் பாக்கம் பகுதியில் சென்னை திருச்சி இடையிலான மேல்மருவத்தூர் ரயில் பாதையில், செய்யூர்-வந்தவாசி செல்லும் சாலையின் ரயில்வே கேட் (எல்சி- 74) அமைந்துள்ளது. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மணல் மற்றும் காய்கறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஏற்றி வரும் லாரிகள், சோத்துப்பாக்கம் பகுதியில் உள்ள மேற்கண்ட சாலை வழியாக ரயில்வே கேட்டை கடந்து செய்யூர், சித்தாமூர் வழியாக ஈசிஆர் சாலையை அடைந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன. இதனால், நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங் கள் ரயில்வே கேட்டை கடந்து செல்லும் நிலை உள்ளது. அதேபோல், பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் கிராம மக்கள் மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக செல்லும் போது ரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்நிலையில், இந்த இருவழி ரயில் பாதையில் ரயில்கள் வருவதை யொட்டி அடிக்கடி ரயில்வே கேட் மூடப் படுகிறது. இதனால் வாகன ஓட்டி களும் பொதுமக்களும் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் ரயில்கேட் பகுதியில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்திய மாணவர் சங்கம் ஜனநாயக மாதர் சங்கம் விவசாய தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து கையெழுத்து இயக்கம் நடத்தி ஒன்றிய அரசு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அனுப்பி வைத்தனர், இதனிடையே, கடந்த 2024ம் ஆண்டு உயர் மட்ட மேம்பாலம் அமைப்பதற் காக மண் பரிசோதனை உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. ஆனால், அடுத்தக் கட்ட பணிகள் தொடங்கப்படா ததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந் தனர். தொடர் போராட்டத்தின் விளை வாக சோத்துப்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமை ப்பதற்காக ரயில்வேதுறை சார்பில் ரூ.31.87 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. எனவே உடனடியாக மேம்பால பணி யில் துவக்கிட வேண்டும் அதுவரை யிலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப் படுத்த கால வரமுறையின்றி இயக்க ப்பட்டு வரும் கனரக வாகனங்களை நேர கட்டுப்பாட்டுக்குள் வரையறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்து இந்திய ஜனநாயகம் மாதர் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் சனிக்கிழயைன்று (பிப்ரவரி 22) மாலை சோத்துப்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகில் வாலிபர் சங்கத்தின் சித்தாமூர் ஒன்றியச் செய லாளர் ப. க.சத்யா தலைமையில் பாடை க்கட்டியும் படுகாயம் அடைந்தவர்கள் கட்டு கட்டி சிகிச்சை பெறுவது போல நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் கோரிக்கைகளை விளக்கி வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இரா.சதீஷ், மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் செந்தமிழன் , மாவட்ட குழு உறுப்பினர் தமிழ் பாரதி,ஒன்றிய நிர்வாகிகள் மு. பிரதாப், முகுந்தன்,பாலாஜி, முருகன், விஜய், ருத்ரமூர்த்தி இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தயாநிதி, மாவட்ட தலைவர் சத்யதாஸ், நிர்வாகிகள் சுஜித், கிருஷ்ணகுமார், கிஷோர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் க.ஜெயந்தி, மாவட்டக் குழு உறுப்பினர் நவரத்தினம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் க.புருஷோ த்தமன், நிர்வாகிகள் ஸ்டாலின்குமார், பா.க. விநாயகமூர்த்தி உள்ளிட்ட பலர் பேசினர்.