tamilnadu

img

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு இல்லை: முதல்வர்

புதுச்சேரி, மார்ச் 13- கொரோனா பாதிப்பை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கை களையும்  மேற்கொண்டு வருகிறது என புதுச்சேரி முதல்வர் நாரா யணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கரோனா முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் குறித்து அதி காரிகளுடன் வெள்ளியன்று சட்டப் பேரவையில் ஆலோ சனை நடத்தினார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:- புதுச்சேரியில் 83 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டனர். அவர்களில் 16 பேரின் ரத்த மாதிரியை எடுத்து ஆய்வி ற்கு அனுப்பப்பட்டது.  14 பேருக்கான பரிசோதனை முடிவில் கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது.  மீதியுள்ள 2 பேருக்கான ஆய்வு முடிவு விரையில் வந்துவிடும். அவர்கள் தொடர்ந்து தனி அறையில் வைத்து கண் காணிக்கப்பட்டு வருகின்ற னர். இதுவரை புதுச்சேரியில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்பட வில்லை. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது. வெண்டி லேட்டர், இன்சூலேட்டர், மாஸ்க் போன்ற உப கரணங்களை உடனடியாக வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களிடம் விழுப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நோட்டீஸ் மூலம்  50 ஆயிரம் குடும்பங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள் ளோம். பள்ளிகளில் மாண வர்களுக்கு கைகைகளை எவ்வாறு சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டுள் ளது. தனியார் பேருந்து, அரசு பேருந்துகளில் கிருமி நாசினிகளை தெளிக்க கூறியுள்ளோம். புதுச்சேரி அரசுத்துறையில் ஊழியர்க ளின்  பயோ மெட்ரிக்பதிவு முறை ரத்து செய்யப்பட்டு ள்ளது. கல்வித்துறை தமிழ்நாடு பாடத்திட்டத்தை பின்பற்றுவதால் முன் கூட்டியே தேர்வுகளை முடிப்பதை முடிவுசெய்ய முடியாது. பொது இடங்க ளில் அதிகமாக மக்கள் கூடு வதை தடுக்க வேண்டும். மேலும் புதுச்சேரி அரசு மருத்துவர்கள், ஜிப்மர் மருத்துவர்கள் ஆகியகுழுவி னர்  டெல்லி சென்று, கொரோனா பாதிப்பிற்கு மருத்துவம் செய்வது தொடர்பாக பயிற்சி எடுத்து வந்துள்ளனர். இவர்கள் புதுச்சேரியில் உள்ள  மருத்து வர்களுக்கு பயிற்சி கொடு த்துள்ளனர். உபகரணங்கள் வாங்கதேவையான நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.