tamilnadu

கொரட்டூரில் போக்சோ சட்டத்தில் கொத்தனார் கைது

அம்பத்தூர், செப். 18- அம்பத்தூர் கொரட்டூர் ரெட்டி தெருவில் வசிப்பவர் முருகன் (40). இவரது மனைவி சித்ரா (35). இவர்க ளுக்கு 6ஆம் வகுப்பு படிக்கும் 11 வயதில் ஒரு மகள் உள்ளார்.  அதே குடியிருப்பில் வசிப்பவர் சிவராமன் (45). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் செவ்வாயன்று (செப்.17)  சிவராமன் சித்ராவின் 11 வயது மகளிடம் தகாத முறையில் நடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அதே குடியிருப்பில் வசிக்கும் மற்றொரு பெண் பார்த்துள்ளார். இதுகுறித்து அவர் சித்ராவிடம் கூறியுள்ளார். இதுகுறித்து சித்ரா அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய த்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசார ணையில் சிவராமன் சிறுமியை பாலியல் சீண்டல் செய்தது தெரிய வந்தது. இதை யடுத்து காவல் துறையினர் சிவரா மன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்த னர். பின்னர்  அவரை புதன்கிழமை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படு த்தி சிறையில் அடைத்தனர்.