சென்னை, செப்.22- வடமாநில வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறித்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் ரைக்கன் கான் ( 26) இவர் பழைய பல்லாவ ரத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார் சனிக்கிழமை பல்லாவரம் பகுதியில் நடை பெறும் சந்தைக்கு சென்று விட்டு வீட்டுக்கு செல்வதற்கு நடந்து வந்தபோது எதிரே வந்த 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 2000 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். தகவல் அறிந்த காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது பணம் பறித்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த ஆனந்தை கைது செய்த னர். அவருடன் கொள்ளையில் ஈடுபட்ட தமிமுன் அன்சாரியை தேடி வருகின்றனர்.