தமிழகத்தில் ஜிஸ்கொயர் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை இன்று காலை முதல் நடத்தி வருகிறது.
ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு தொடர்புடைய 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வருகிறனர். கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள ஜிஸ்கொயர் நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், திமுக எம்எல்ஏ மோகன் மற்றும் அவருடைய மகன் கார்த்திக் ஆகியோரது வீடுகளிலும், ஜிஸ்கொயர் நிறுவனத்தின் இயக்குநர் பாலாவின் வீட்டிலும், ஆடிட்டரின் அண்ணாநகர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.