tamilnadu

img

இணையப் பாதுகாப்புக் கொள்கை வெளியிடப்படும்: முதல்வர்

சென்னை,மார்ச் 24- பொதுமக்கள் இணைய வழியில் பாது காப்பாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்வ தற்காக “இணைய பாதுகாப்புக் கொள்கை” வெளியிடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-ன் கீழ்  முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தகவல் தொழில்நுட்பவியல் துறை குறித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அதில், இந்தியாவின் மென்பொருள் உற்  பத்தி மற்றும் ஏற்றுமதியில், 30 விழுக்காடு பங்களிப்பை தமிழ்நாடு அளித்து வரு கிறது. சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் முத லீட்டை இத்துறையின் மூலம் தமிழ்நாடு செய்  துள்ளதாக, இந்திய மின்னணு தொழிற்சாலை கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இத்துறை சுமார் 40 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கி வருகிறது. இதனால் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது.  உலகெங்கும் உள்ள மின்னணு உற் பத்தித்  தொழில்களின் முதலீட்டை தமிழ்நாட்டில் ஈர்க்கும் விதமாக 300 கோடி ரூபாய் மதிப்பீட்  டில் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் நான்கு இடங்களில் மின்னணு  உற்பத்தி தொகுப்பு மண்டலங்களை தமிழ்நாடு மின்னணு நிறுவனம் அமைக்கும். பொதுமக்கள் இணைய வழியில் பாது காப்பான பணப் பரிமாற்றம் செய்யவும், பல்  வேறு தரப்பிலிருந்து தொடுக்கப்படும் இணைய வழி தாக்குதல்களை எதிர்கொள்ள வும், பொது மற்றும் தனியார் தரவு உள்கட்ட மைப்புகளை பாதுகாத்திடவும் வழிவகை செய்யும் “இணைய பாதுகாப்புக் கொள்கை”  வெளியிடப்படும் என்றார் முதல்வர்.