திறன் மேம்பாட்டு கழக இயக்குநராக இன்னசென்ட் திவ்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆவின் நிர்வாக இயக்குநராக கந்தசாமி பேரிடர் மேலாண்மை வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பேரிடர் மேலாண்மை வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த சுப்பையன் ஆவின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.