அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் குமராட்சி ஊராட்சி ஒன்றியம் சி.அரசூர் கிராமத்தில் உள்ள தட்சன் தெரு பாசன வாய்க்காலை தூர்வார வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் குமராட்சி பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே தலைவர் செல்வகாந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பிரகாஷ், ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார், நிர்வாகிகள் வேல்முருகன், பாலமுருகன், லட்சுமி, தமிழரசி, ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இறுதியில் கொள்ளிடம் வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் அருணகிரியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அருணகிரி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.