சென்னை,மே 29 சென்னையை ஓட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 25 தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கவேண்டாம் என்று பெற்றோரை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் புதனன்று (மே 29) விடுத்துள்ள பத்திரிகை செய்தி வருமாறு: குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பின்படி அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின்தடையின்மைச் சான்று மற்றும்அங்கீகாரம் பெற்றே செயல்படவேண்டும் எனவும் தடையின்மைச் சான்று மற்றும் அங்கீகாரமின்றி எந்த ஒரு பள்ளியும் செயல்படக்கூடாது எனவும் ஏற்கனவே பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்விஅலுவலர்கள் பள்ளிகளை ஆய்வுசெய்து தடையின்மைச் சான்று மற்றும் அங்கீகாரமின்றி செயல்பட்டுவந்த பள்ளிகளுக்கு காரணம் கேட்கும் குறிப்பாணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தடையின்மைச் சான்று மற்றும் அங்கீகாரமின்றி செயல்பட்டுவரும் பள்ளிகளில்பயிலும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாததுடன் அப்பள்ளிகளால் வழங்கப்படும் கல்விச் சான்றுகள் தகுதியற்றதாகவும், அரசால் நடத்தப்படும் பொதுத் தேர்வுகள் எழுத இயலாத நிலையும் ஏற்படுகிறது.எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் (சென்னை புறநகர்) உள்ள பின்வரும் பள்ளிகள் நாளது தேதிவரை தடையின்மைச் சான்று மற்றும் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வருவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தடையின்மைச் சான்று மற்றும் அங்கீகாரம் பெறாத இப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையினை பெற்றோர்கள் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும்நோட்டீஸ் வழங்கப்பட்டு பத்திரிக்கைச் செய்தி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து தடையின்மைச் சான்று மற்றம் அங்கீகாரமின்றி செயல்படும் பட்சத்தில் சார்ந்த பள்ளிகள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், சார்ந்த பள்ளிகளுக்கு எச்சரிக்கைப்படுகிறது.பள்ளிக் கல்வித் துறையின் தடையின்மைச் சான்று மற்றும் அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் வருமாறு:வி.என்.ஆர் விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளி, கங்கையம்மன் நகர், மதுரவாயல், சென்னை - 95, நாராயணா டேக்நோசி.பி.எஸ்.இ பள்ளி, மீனாட்சி தெரு, கார்த்திகேயன் நகர், மதுரவாயல், சென்னை - 95, ரவீந்திர பாரதி குளோபல் சி.பி.எஸ்.இ. பள்ளி, கருணீகர் தெரு, பூவிருந்தவல்லி நெடுங்சாலை, நெற்குன்றம், சென்னை- 107, மார்கிரிகோரியஸ் பப்ளிக் சி.பி.எஸ்.இ. பள்ளி, முகப்பேர் மேற்கு, சென்னை -37, சிறி சைதன்யா டேக்நோ சி.பி.எஸ்.இ.பள்ளி, அத்திப்பட்டு, அம்பத்தூர், சென்னை - 58, கே.சி. டோஷினிவால் விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளி, 1 வது வார்டு, நெ.1,77, பெருமாள் கோவில் தெரு,மாத்தூர், சென்னை - 68.விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி, அன்னை சிவகாமி நகர், எர்ணாகூர், சென்னை6000578. எஸ்.எம்.டி. மோகினி சரஓகி விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ.பள்ளி, ஜோதி நகர்,4 வது மெயின்ரோடு, திருவொற்றியூர், சென்னை - 19, வேலம்மாள் நியூஜென் சி.பி.எஸ்.இ. பள்ளி, வார்டுஜி, வில்லேஜ் சாலை, திருவொற்றியூர், சென்னை- 19. எஸ்.வீ.பீ மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, திடில் நகர், பெருமாள் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை - 95, எஸ்.வீ.பீ மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, பிள்ளையார் கோவில் தெரு, மேட்டுக்குப்பம்.ஜெனட் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, ஏரிக்கரை தெரு,மதுரவாயல், சென்னை- 95, எஸ்.ஆர்.என்.எம் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, அனீஷ் நகர், 2 வது தெரு, ராமாபுரம், சென்னை - 89.கிண்டர்லான்ஞ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, வளசரவாக்கம், கிண்டர்லான்ஞ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, நொளம்பூர், லாமெக் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, கைக்கான்குப்பம், வளசரவாக்கம், திவ்யம் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, முகப்பேர் கிழக்கு, ஜெயவேல் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, அத்திப்பட்டு, அம்பத்தூர், சென்னை- 53, ஆச்சார்யா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, ஜானகி நகர், வளசரவாக்கம், ஆச்சார்யா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, திருநகர், வளசரவாக்கம், ஆச்சார்யா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, ஆர்.கே.நகர், வளசரவாக்கம், இமேனுவேல் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, சூரப்பட்டு மெயின்ரோடு, விநாயகபுரம், சென்னை 99, செயினட் ஜான்ஸ்மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, புழல், தேவிகருமாரிஅம்மன் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, திருவொற்றியூர், சென்னை- 19, தேவா பிரபரேடரி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, எண்ணுர். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.