tamilnadu

img

நீதிமன்றங்களில்  வேலை நாட்கள் அதிகரிப்பு

சென்னை:
உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு வாரத்தில் 6 நாள்கள், வேலை நாள்களாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப் பட்ட ஊரடங்கினாலும், குறைவான ஊழியர்கள், அதிகப்படியான வேலை மற்றும் தற்போது நிலவும் சூழ்நிலை ஆகியவற்றினாலும், நீதிமன்றங்கள் வாரத்தில் 6 நாள்கள் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்கள் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் வழக்கமான பணி நேரத்துடன், வாரத்தில் 6 நாள்கள் செயல்படும்.பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட சனிக்கிழமை, மாதத்தில் 2 மற்றும் 4ஆவது வார சனிக்கிழமைதவிர, பிற வாரங்களில் 6 நாள்களும் நீதிமன்றங்கள் செயல்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.