tamilnadu

கிடைக்குமா புத்தகம்... சிறக்குமா படிப்பு..?

தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் ஜூன் 3ஆம் தேதி திறக்கப்பட்ட உடன் முதல் நாளே மாணவர்கள் அனைவருக்கும் புத்தகங்களும், பைகளும், காலணி களும், சீருடைகளும் அரசால் வழங்கப்படும். புதிய பேருந்து இலவச பயண அட்டை இல்லாவிட்டாலும் பள்ளிச்சீருடையில் இருந்தாலே போதும் அரசுப் பேருந்துகளில் பள்ளிக்கு இலவச பயணம் செய்யலாம் என்றெல்லாம் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து கூறி வந்தார் கல்வி அமைச்சர் செங்கோட்டை யன். தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவுகிறது எனவே பள்ளி திறப்பதை சில நாட்கள் தள்ளி வைக்க வேண்டும் என்று கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பெரும்பாலான வகுப்புகளுக்கு புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டங்கள் அறி முகப்படுத்தப்பட்டுள்ளது, எனவே 210 நாட்கள் வகுப்புகள் நடந்தே தீரவேண்டும். விடுமுறையை கூடுதலாக்கினால் பாடங்களை நடத்தி முடிக்க இயலாது என்று கூறி ஜூன் 3ஆம் தேதியே பள்ளி கள் திறக்கப்பட்டன. கடும் வெப்பத்தையும் பொருட்படுத்தா மல் மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்தனர். ஆனால் புத்தகங்கள்தான் வரவில்லை. எந்த வகுப்பிற்கும் தேவை யான புத்தகங்கள் முழுமையாக வந்து சேரவில்லை. இதனால் பெற்றோர்க ளுக்கும் பதில் கூற இயலாமல், அரசை யும் கேட்டுப் பெற முடியாமல் தலைமையா சிரியர்களும், வகுப்பாசிரியர்களும் படும்பாடு சொல்ல இயலாது. கள்ளக்குறிச்சி நகரத்திலும், கல்வி மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளில் தேவையான அளவு பாடப்புத்தகங்கள் பள்ளி திறந்து 2 வாரங்கள் கடந்தும் இன்னும் விநியோகிக்கப்படவில்லை. புத்தகங்கள் இல்லாததால் பாடங்களை நடத்த இயலாமல் ஆசிரியர்களும் அவதிப்படுகின்றனர்.  இப்படியிருந்தால் கல்வியில் முன்னேற்றம் எப்படி சாத்தியமாகும். மேலும் எந்த ஒரு சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல் அரசு பள்ளிகளில் உபரியாக ஆசிரியர்கள் இருப்பதாகக் கூறி அவர்களை அங்கன்வாடி பள்ளி களுக்கு இடம் மாற்றுவதும் நடை பெறுகிறது. எஸ்.சித்ரா.