சென்னை, பிப்.24– எரிபொருள் சிக்கன பிர மாண்ட விழிப்புணர்வு பிரச் சாரத்தை இந்தியன் ஆயில் நடத்தியது. பள்ளி மாணவர்க ளிடையே எரிபொருள் சிக்கன விழிப்புணர்வுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டியை நடத்தியது. வெற்றி பெற்ற மாணவருக்கு தமிழ்நாடு அரசு ‘வழி காட்டுதல்’ நிறுவன நிர்வாக இயக்குனர் நீரஜ் மிட்டல் பரிசுகளை வழங்கினார். இந்தியன் ஆயில் நிர்வாக இயக்குநர் மற்றும் மாநில அளவில் ஒருங்கிணை ப்பாளர் பி.ஜெயதேவன் வரவேற்று, எரிபொருள் சிக்கன நடவடிக்கைகள் பற்றி விவரித்தார். இந்த விழாவில் கெயில் தலைமை பிராந்திய பொது மேலாளர் எம்.கே.பிஸ்வாஸ், பாரத் பெட்ரோலியம் எஸ்.தனபால், பெட்ரோலியம் சேமிப்பு ஆராய்ச்சி சங்கம் (பிசிஆர்ஏ) இயக்குநர் எஸ்.பி.செல்வம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆர்.சீனிவா சன் ஆகியோர் கலந்து கொண்டனர். சாக்சம் 2020 என்னும் பெட்ரோலிய சிக்கன பிரச்சாரத்தையொட்டி இந்தியன் ஆயில் எக்சிகி யூடிவ் டைரக்டர் பி.ஜெய தேவன் பேசுகையில், வருங்கால சந்ததிகளுக்கான பெட்ரோலிய எரிபொருளை சேமித்து வைக்க வேண்டும். பள்ளி மாணவர்களிடம் பிரச்சாரம் வரும் தலை முறையை காக்கும் என்றார். ஓவியப் போட்டியில் முதல், 2வது பரிசு வென்ற பார்வையற்ற இரு மாணவி கள் தாங்கள் வரைந்த ஓவியத்தின் சிறப்பை விவரித்தனர். விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்ட பள்ளி மாண வருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஒரு மாதம் முழுவதும் நடைபெற்ற இந்த விழிப்பு ணர்வு பிரச்சாரத்தை யொட்டி, மாசு கட்டுப்பாடு பரி சோதனை, சைக்கிள் ஊர்வலம், நடை பயணம், மராத்தான், ஓவியப்போட்டி, வினாடி வினா, சமையல் போட்டிகள் நடத்தப்பட்டது என்று ஜெயதேவன் தெரி வித்தார்.