சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் வியாழனன்று கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர் மணிகண்டன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு முழுவதும் கடந்த 18 ஆண்டுகாலமாக இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் செய்த 4 லட்சத்து 52 ஆயிரம் விவசாயிகள் காத்திருப்பில் உள்ளனர். அவர்களில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு நடப்பாண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவசமாக மின் இணைப்பு கொடுக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிக விரைவில் தொடங்கி வைப்பார் என்றும் அதனைத் தொடர்ந்து மற்ற விவசாயிகளுக்கும் படிப்படியாக இலவச மின் இணைப்பு கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.