tamilnadu

img

அடையாறு ஆற்றில் வெள்ளம் முடிச்சூர் பகுதியில் 1000 வீடுகளை சூழ்ந்த தண்ணீர்

தாம்பரம், டிச.2- அடையாறு ஆற்றில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் படப்பை அருகில் உள்ள மணி மங்கலம் பெரிய ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு அது அடையாறு ஆற்றில் விடப்பட்டது. இதனால் அடையாறு ஆற்றில் செல்லும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரித்தது. இதன் காரணமாக தாம்பரத்தை அடுத்துள்ள மணிமங்கலம், முடிச்சூர், வரதராஜபுரம், அன்னை அஞ்சுகம் நகர், பெருங்களத்தூர் அன்னை சத்யாநகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.  வெள்ளம் சூழந்ததைத் தொடர்ந்து  அங்கு வசித்த பொது மக்கள் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு வெளியில் சென்றனர். பலர் தங்களது உறவினர்கள் வீடுகளிலும், முகாம்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் டியூப்புகளை படகுகளாக மாற்றி பாதிக்கப்பட்ட மக்களை மீட்டனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தினரும், காவல்துறையும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கொரட்டூர் வீட்டு வசதி வாரியத்தில் ஒன்றாவது தெரு முதல் 70வது தெருக்கள் வரை மழை நீர் வெளியேற வழி இல்லாமல் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்பு களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வீட்டிற்கு உள்ளே மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள். தெருக்கள் முழுவதும் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. பலத்த மழை காரணமாக அனைத்து வீடுகளிலும் மழை நீர் புகுந்ததால் மின் தடை ஏற்பட்டு ள்ளது. எந்த பணிகளையும் செய்ய முடியாத நிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். வில்லிவாக்கம் அன்னை சத்யா நகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் வசித்த 100-க்கும் மேற்பட்டோர் வெளி யேற்றப்பட்டு சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.