tamilnadu

அதானி துறைமுக விரிவாக்கத்துக்கு மீனவர்கள் எதிர்ப்பு

சென்னை, ஆக. 30 - சென்னை அருகே அதானி துறைமுக விரிவாக்கத்துக்கு மீன வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள னர். ‘STOP ADANI, SAVE PULICAT’  என்ற வாசகங்கள் அடங்கிய முகக்கவ சம் அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அடுத்த காட்டுப்பள்ளி யில் அதானி துறைமுகம் ஒன்று  செயல்பட்டு வருகிறது. அந்த  துறைமுகத்தை காட்டுப்பள்ளியி லிருந்து பழவேற்காடு வரை சுமார்  20 கி.மீ தூரம் விரிவாக்கம் செய்ய  மத்திய அரசு அனுமதி அளித்துள் ளது. இதனையடுத்து அதானி துறை முக விரிவாக்க பணிகளை அதிகாரி கள் தொடங்கியுள்ளனர். இந்நிலை யில் இத்திட்டத்தை கைவிடக்கோரி, பழவேற்காடு மீனவர்கள் கடந்த  ஓராண்டாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வரு கின்றனர். இதன் தொடர்ச்சியாக அதானி துறைமுக விரிவாக்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி  ‘STOP ADANI, SAVE PULICAT’  என்ற வாசகங்கள் எழுதப்பட்ட முகக்  கவசங்களை அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். துறைமுக விரிவாக்கத்தால், கடல்  வாழ் இனங்கள் அழியும். இதனால்  அதிகளவு மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதா ரம் முற்றிலும் சீர்குலைந்து விடு மென்று மீனவர்கள் வேதனை தெரி வித்தனர். எனவே இத்திட்டத்தை உட னடியாக கைவிட வேண்டுமென்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.