tamilnadu

img

தடையை மீறி போராட்டம்: எடப்பாடி பழனிச்சாமி கைது!

சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்திய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஜெயகுமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கியது. சட்டப்பேரவையில் நேற்று நடந்த கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமியின் அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை ஆகியவை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே, எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து, அ.தி.மு.க. சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில், இன்று தடையை மீறி போராட்டம் நடத்திய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஜெயகுமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.