சென்னை, ஜூலை 27- பொறியியல் கல்லூரி களை தரமனாவை, தரமற் றவை என பாகுபாடு செய்ய வில்லை என்று அண்ணா பல் கலைக் கழகம் தெரி வித்துள்ளது. தமிழகத்தில் 89 பொறி யியல் கல்லூரிகள் தரமற் றவை என்றும், தரமற்ற கல்லூரிகள் என்று வகைப் படுத்தப்பட்ட 12 கல்லூரிகள் காஞ்சிபுரத்திலும், 7 கல்லூரி கள் கோவையிலும் உள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த கல்லூரி களை கவுன்சிலிங்கின் போது தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தரமற்ற கல்லூரிகள் மீது 25 முதல் 100 சதவீத மாணவர் சேர்க்கையை நிறுத்தும் அளவிலான நட வடிக்கைகளில் அண்ணா பல் கலைக்கழகம் ஈடுபட்டுள் ளது என்று சமூக வலைதளங் களில் செய்திகள் வைரலாக பரவி வருகின்றன.
இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அறிக்கை வெளியிட்டுள் ளார். அதில், சமூக வலைத் தளங்களில், அண்ணா பல் கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இணைவுக் கல்லூரிகளில், 89 கல்லூரி கள் தரமற்றது என்றும் அவற் றின் பெயர் மற்றும் ஏனைய தகவல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளி யிட்டுள்ளதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றது. அண்ணா பல்கலைக் கழகம் தனது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இணைவுக் கல்லூரிகளில் இது போன்ற தரமற்ற கல்லூரிகள்/ தர மான கல்லூரிகள் என்று பாகு பாடு செய்யவில்லை. 89 கல்லூரிகளின் பெயர் பட்டி யல் குறித்த தகவல்களை வெளியிடவில்லை என்று கூறப்பட்டுள்ளது.