tamilnadu

புதுவையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 46ஆக உயர்ந்தது

புதுச்சேரி, மே. 26- புதுச்சேரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் மல்லாடி  கிருஷ்ணாராவ் கூறினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (மே 24) வரை  29 பேர் கதிர்காமம் கொரோனா அரசு மருத்துவ கல்லூரி  மருத்துவமனையிலும், 2 பேர் மாகியிலும் சிகிச்சை பெற்று வந்தனர். திங்களன்று (மே 25) மேலும் 3 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் புதுச்சேரியில் தற்போது 34 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சனிக்கிழமை கொரோனா தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டவர்களில் 2 பேர், ஏற்கனவே பாதிக்கப்பட்டவரின் மனைவி மற்றும் மகள் ஆவார்.  ஒருவர் ஏற்கனவே பாதிக்கப்பட்ட மற்றொருவரின் தந்தை ஆவார். எனவே ஒதுமக்கள் கரோனா தொற்று  பரவாமல் இருக்க தனிமனித இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். மேலும் முகக் கவசம் அணிய வேண்டும், கிருமி நாசினியை பயன்படுத்த வேண்டும். இதுவரை புதுச்சேரியில் 46 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 பேர்  சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள னர். 34 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்க ளில் ஒருவர் சென்னையிலும், ஒருவர் கேரளா கண்ணூரிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த புதுச்சேரியைச் சேர்ந்தவருக்கு அங்கு  மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் 12 நாட்கள் தனிமையில் இருந்த அவர்  திங்களன்று புதுச்சேரி திரும்பினார். மேலும் இரண்டு  நாட்கள் அவரை தனிமையில் வைத்துள்ளோம்.  மீண்டும் பரிசோதனை செய்து தொற்று இல்லை  என்று உறுதியான பின்னரே அவரை வீட்டிற்கு அனுப்பி வைப்போம். கடந்த 10 நாட்களாக தினசரி 2 அல்லது 3 பேர் புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இது பெரிய மாநிலங்களில் உள்ள மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது அதிகம்.  எனவே மக்கள் மேலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.