சென்னை,ஆக.02- தமிழகத்தில் ஞாயிறன்று மேலும் 5,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று (ஞாயிறு) ஒரே நாளில் மேலும் 5,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,57,613 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,065 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,01,951 ஆக அதிகரித்துள்ளது. ஞாயிறன்று 98 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழ ந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 4,132 ஆக அதிகரித்துள்ளது.ஞாயிறன்று 5,517 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணி க்கை 1,96,483 ஆக உயர்ந்துள்ளது. தமிழ கத்தில் தற்போது 56,998 பேர் கொரோ னாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.