tamilnadu

img

கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊதிய உயர்வு பேச்சு துவக்குக: சிஐடியு

வேலூர், அக்.18- வேலூர் மாவட்டம் கேத்தாண்டப்பட்டி கூட்டு றவு சர்க்கரை ஆலையில்  சிஐடியு சார்பில் நுழைவு வாயிற் கூட்டம் தலைவர் கே.ஏகாம்பரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க  கவுரவத் தலைவர் வ. அருள்சீனிவாசன் சிறப்புரை யாற்றினார்.  சிபிஐஎம் வட்டச் செய லாளர் எம்.இந்துமதி, சங்கச் செயலாளர் கே. பார்த்தீபன் நிர்வாகிகள் ரஜினி, செல்வகுமார், நரேஷ்குமார், சோமசுந்தரம், ஜெயக்குமார் ரவிக்குமார், பூபாலன் உட்பட பலர் பங்குகொண்டனர்.  ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை உடனே துவங்கி சுமூக தீர்வு காண வேண்டும், அரசு விடுமுறை நாள் ஏற்கனவே உள்ளது. போல் நடைமுறை படுத்த வேண்டும், அலுவலக மேலாளர், தொழிலாளர் நல அலுவலர் ஆகியோரின் தான்தோன்றித்தனமான போக்கை மாற்றிக் கொள்ள  வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்கக் கூடாது  தொழிலாளர் ஒப்பந்தத்தை அமலாக்க வேண்டும் என்றும்  வலியுறுத்தினர்.