tamilnadu

img

மாணவிக்கு பா. ஜான்சி ஆறுதல்

சிதம்பரம், செப்.10- நாகை மாவட்டம் மயி லாடுதுறை அருகே குத்தா லம் கிராமத்தைச் சேர்ந்த  முத்தமிழன்(20), கதிரா மங்கலம் கிராமம் மாணவி பவானி(19) பெயர் மாற்றப்  பட்டுள்ளது. உறவினர்க ளான இவர்கள் இருவரும்  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உடற் கல்வி இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து  வருகிறார்கள். காதல் பிரச்ச னையால் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆசிட்டை மாணவியின் மீது  ஊற்றியுள்ளார். இவரது அல றல் சத்தம் கேட்டு ஓடி வந்த மாணவர்கள் முத்தமிழனை பிடித்து கடுமையாக தாக்கி யுள்ளனர். பிறகு இருவரை யும் மருத்துவமனையில்  அனுமதித்துள்ளனர். தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு சிதம்பரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட காவல்துறையினர் மாணவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிந்து  விசாரணை செய்து வருகிறார்கள். இந்த தகவலை அறிந்த சிபிஎம் மாநிலக்குழு உறுப்பி னர்கள் மூசா, பா. ஜான்சி ராணி, சிதம்பரம் நகரச் செய லாளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் முத்து, மாதர் சங்க நிர்வாகி அமுதா, மாண வர் சங்க மாநில நிர்வாகி கும ரவேல்,வாலிபர் சங்கச் செயலாளர் கோபால் உள்  ளிட்டவர்கள் மருத்துவ மனைக்கு சென்றனர்.அங்கு மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.