tamilnadu

தலைமைச் செயலக ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு

சென்னை, ஜூன் 1-தலைமைச் செயலக ஊழியர்கள் ஆடை அணிவது தொடர்பாகத் திருத்தம் செய்யப் பட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தலைமைச் செயலாளர் கிரிஜா வைத் தியநாதன் வெளியிட்ட அரசாணையில் தலைமைச் செயலக ஊழியர்கள் அலுவலகத்தின் நன்மதிப்பை பராமரிக்கும் வகையில் நேர்த்தியான, சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.பெண் ஊழியர்கள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் ஆகியவற்றை மட்டும் அணியவும், சேலையைத் தவிர மற்ற உடைகளை அணியும் போது துப்பட்டாவையும் சேர்த்து அணியவும் அறிவுறுத்தப்பட்டுள் ளது. உடைகளின் நிறம் மெல்லிய வண்ணமாக இருக்க வேண்டும் என்றும் கூறப் பட்டுள்ளது. ஆண் ஊழியர்கள் கால்சட்டை மற்றும் சட்டை அணியவும் டீ-சர்ட் உள்ளிட்ட ஆடைகளை அணியக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் ஆஜராகும் போது ஆண் அதிகாரிகள் முழுக்கை கோட்களை டையுடன் அணியவும், அவை கண்ணைப் பறிக்கும் அடர் வண்ணத்தில் இல்லாமல் மெல்லிய வண் ணத்தில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள் ளது. பெண் அதிகாரி கள் சேலையையோ மெல்லிய வண்ணத் துப்பட்டாவுடன் சல்வார் கமீஸ் அல்லது சுடிதாரையோ அணிந்து செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.