சென்னை, டிச.11- சென்னை- புதுச்சேரி, தாம்ப ரம்- விழுப்புரம், அரக்கோணம்- காட்பாடி, வேலூர் கண்டோன் மெண்ட் - அரக்கோணம் ஆகிய வழித்தடங்களில் நவீன வசதிகளு டன் கூடிய ‘மெமு’ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மெமு என்பது மின்சாரத்தில் இயங்கும் ரயில் பெட்டிகளாகும். சென்னை எழும்பூர்- புதுச்சேரி இடையே இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் மாற்றப்பட்டு நவீன வசதி களுடன் கூடிய ‘மெமு’ ரயிலாக புதன்கிழமை(டிச.11) முதல் இயக்கப்பட்டது. மறு மார்க்கமாக புதுச்சேரியி லிருந்து சென்னை எழும்பூருக்கு ‘மெமு’ ரயில் இயக்கப்பட உள்ளது. தாம்பரம்- விழுப்புரம் இடையே இரு மார்க்கமாக இயக்கப்படும் பாசஞ்சர் ரயிலை ‘மெமு’ ரெயிலாக மாற்றி வருகிற 26 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூர்-புதுச்சேரி, தாம்பரம்- விழுப்புரம் ‘மெமு’ ரயில்களில் 12 பெட்டிகள் இடம் பெறுகின்றன. மேலும் அரக்கோணம்- காட் பாடி இடையே இரு மார்க்கமாக வும், அரக்கோணம்- வேலூர் கண் டோன்மெண்ட் இடையே இரு மார்க்கமாகவும் வருகிற 16 ஆம் தேதி முதல் ‘மெமு’ரயில்கள் இயக் கப்பட உள்ளன. இந்த ரயில்களில் 8 பெட்டிகள் இடம் பெற்றுள்ளன. இந்த ‘மெமு’ரயிலில் குஷன் இருக்கைகள், எல்.இ.டி. விளக்கு, பயோ கழிவறை உள்பட பல்வேறு நவீன வசதிகள் இடம் பெற்றுள் ளன. ரயிலின் இருபுறமும் என்ஜின் பொருத்தப்பட்டு இருக்கும். இத னால் ஒவ்வொரு முறையும் ரயில் என்ஜின் மாற்றி அமைப்பதில் ஏற்ப டும் காலதாமதம் தவிர்க்கப்படும்.