tamilnadu

திறந்த வெளியில் குப்பை கொட்டுபவரிடம் கட்டணம் வசூல் சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னை, ஆக. 21- திறந்த வெளியில் குப்பை கொட்டும் கட்டிட மற்றும் வியாரிபாரிகளிடம் இருந்து அகற்றுவதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரி வித்துள்ளார். சென்னையில் உள்ள 14 லட்சத்து 94 ஆயிரத்து 254 வீடுகளுக்கு தினந்தோறும் சென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதில் 5 லட்சத்து 40 ஆயிரத்து 953 வீடுகளில் மட்டுமே குப்பை தரம் பிரித்து அளிக்கப்படுகிறது. இந்த குப்பை பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் கொட்ட ப்படுகிறது. இதை தவிர்த்து பள்ளிக்கரணை, சாத்தாங்காடு உள்ளிட்ட குப்பைக் கிடங்குகளில் மறுசுழற்சி செய்யும் பணி நடைபெறுகிறது.  இந்நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் துப்புரவு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலை மையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. இதில் துணை ஆணையர் (சுகாதாரம்) மதுசுதன் ரெட்டி, வட்டார துணை ஆணையர்கள் திவ்ய தர்ஷினி, ஆல்பிஜான் வர்கீஸ், ஸ்ரீதர், திடக்கழிவு மேலாண்மைத் துறை தலைமை பொறியாளர் மகேசன், கண்காணிப்பு பொறியாளர் வீரப்பன், மண்டல அலுவலர்கள், செயற்பொறியாளர் உள்ளிட்ட மாநகராட்சி அலு வலர்கள் கலந்து கொண்ட னர்.  அப்போது மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேசுகை யில், அனைத்து மண்டலங்க ளிலும் குப்பையை தரம்பிரித்து வழங்கும் நடை முறையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பை மறுசுழற்சி செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதி களை விரைவாக ஏற்படுத்த வேண்டும். பெரு நிறுவன சமூக பொறுப்புத் திட்டத்தின் கீழ் குப்பை சேகரிப்பதற்கான பேட்டரி வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திறந்தவெளி இடங்களில் இரவு நேரங்க ளில் பலர் குப்பை கொட்டி விட்டு சென்று விடுகின்றனர். எனவே துப்புரவு கண்காணி ப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர் தெரு வாரியாக உள்ள திறந்தவெளி இடங்களை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதில் யாராவது குப்பை கொட்டினால் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த குப்பையை அகற்றுவ தற்கான கட்டணத்தை அந்த நிலத்தின் உரிமை யாளரிடமிருந்து வசூலிக்க வேண்டும். பெறு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குப்பை தேக்கி வைப்ப வர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும். இதை முழுமை யாக அமல்படுத்த வேண்டும் என்று அவர் பேசினார்.