tamilnadu

img

சேகுவேராவின் மகள் அலெய்டா குவேராவிற்கு உற்சாக வரவேற்பு

புரட்சியாளர் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேராவை இன்று நூற்றுக்கணக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னை விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்றனர்.
கியூபா புரட்சியாளர் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேராவும், பேத்தி பேராசிரியர் எஸ்டெஃபெனி குவேராவும், திருவனந்தபுரத்திலிருந்து இன்று சென்னைக்கு வந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரை வாயிலில் நின்று விண்ணதிரும் முழக்கங்களுக்கிடையே குழந்தைகளும், மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்களும் வரவேற்றனர்.
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் எம்.ஏ.பேபி, ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை போர்த்தியும் வரவேற்றனர். 
சிபிஎம் கட்சியின் இன்று மாலை நடைபெறவுள்ள நிகழ்வுகளில்  அலேய்டா குவேரா பங்கேற்கவுள்ளார். அப்போது அவரை வரவேற்கும் விதமாக பறையாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக சார்பாக துரை வைகோ கலந்து கொள்ளவுள்ளனர்.