tamilnadu

img

சூரிய புத்திரியாக...

நெருப்பினால் எழுதப்பட்ட கவிதை தான் சே குவேரா. உலகெங்கும் இளம் புரட்சியாளர்களுக்குப் போராட்டக் கனலை வாரிக் கொடுத்த சிவப்புச் சூரியன். அந்தச் சூரியனின் மகள் அலைடா குவேரா கியூபா மண்ணிலிருந்து கண்ணூருக்கு வருகைதந்தார். சொல்லமுடியாத மகிழ்ச்சியில் இருந்தது அந்த ஆட்கள் கூட்டம். அவர்களில் யாரும் புரட்சி யின் தியாக நட்சத்திரமான ‘சே’ என்கிற பெயர்கொண்ட எர்னஸ்ட் சே குவேராவைப் பார்த்ததில்லை. கேட்டும் வாசித்தும் அறிந்த அனுபவம் மட்டுமே அவர்களுக்கு இருந்தது. இப்போது அவர்களுக்கு முன்னால் சே குவேரா வின் மகள் நடந்து வருகிறார் - கண்ணூர் மண்ணில் புரட்சியின் ‘சூரியபுத்திரி’யாக. உலகமெங்கும் கம்யூனிஸ்ட் இயக்கத் திற்குப் பலவீனம் ஏற்பட்டுள்ள இந்த நிகழ்காலத்தில்தான் அலைடாவின் கேரள வருகை. அலைடா கேரளத்திற்கு வரும்போது அவர்  சிறிதும் எதிர்பாராதது ஒன்றும் உண்டு. 1959 ஜூலையில் ஜனநாயக முறைப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் முதலாவது கம்யூனிஸ்ட் அரசு கலைக்கப்பட்டதன் 60-வது ஆண்டு இப்போது. அந்த 1959-ஆம் ஆண்டு ஜூன் 2 அன்றுதான் அலைடாவின் தாயார் அலைடாமார்ச்சை சே குவேரா திருமணம் செய்துகொண்டார். 

சுதந்திர கியூபாவின் 60-ஆம் ஆண்டின் ஒரு பகுதியாக இந்தியாவிலும் நேபாளத்திலும் நடைபெறுகிற கியூபா ஒருமைப்பாட்டுத் தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகைதந்த அலைடாவின் முதலாவது நிகழ்ச்சி கண்ணூரில் சென்ற வியாழக்கிழமையன்று நடைபெற்றது. சே குவேராவை நேசிக்கிற பல நூற்றுக்கணக்கா னோர் அலைடாவைப் பார்ப்பதற்கு வந்திருந்த னர். கியூபாவில் நடத்தப்படுகிற அமெரிக்க எதிர்ப்பு அரசியல் நடவடிக்கை ஒரு மருத்துவர் என்ற நிலையில் அலைடாவிடமிருந்து வெளிப் பட்டது. கண்ணூரில் அவர் ஆற்றிய உரையில் ஆவேசமுடன் தெறித்த வார்த்தைகளை மக்கள் கைதட்டி வரவேற்றனர். பேச்சின் இறுதியில் ஸ்பானிஷ் மொழிக் கவிதை ஒன்றை உணர்ச்சிப் பெருக்குடன் சொல்லித் தன்னிலை மறந்தார். அந்தக் கவிதையின் சக்தி அது. ‘போராடுவது என்று தீர்மானித்தால் போராடியே ஆகவேண்டும்- பின்வாங்கக்கூடாது’ என்பது அந்தக் கவிதை யின் உட்பொருள். தந்தையிடமிருந்து பெற்ற இலட்சியமும் வீராவேசமுமாக இருந்தது அந்தக் கவிதை.  ‘சமதா’ பதிப்பகத்தின் 14 புத்தகங்கள் இந்நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன. சே குவேராவைப் பற்றி அவரது மனைவி அலைடா மார்ச் எழுதிய புத்தங்களை அலைடா குவேரா வெளியிட்டார். தந்தையைப் பற்றித் தாயார் எழுதிய “சே குவேரா என் வாழ்க்கைத் தோழர்” என்ற புத்தகத்தை மகள் வெளியிட்டது  ஓர் அபூர்வ நிகழ்ச்சியாக இருந்தது. புத்த கத்தைப் பெற்றுக்கொண்டவர் மற்றொரு உயிர்த் தியாகி அபிமன்யுவின் தாயார் பூபதி. அந்தச் சமயம் அலைடா உணர்ச்சிமயமாகி மனம் நெகிழ்ந்தார்.

அலைடாவிடமிருந்து வலுவான வார்த்தை கள் வந்தன: ‘அழுவதால் மட்டும் ஒருபோதும் தீர்வுகாண முடியாது என்பது கியூபா கற்பித்த பாடமாகும். முன்பு வாழ்ந்தவர்கள் செய்த நல்ல காரியங்களை எல்லோரும் ஏற்றுச் செயல்பட வேண்டும். உயிர்த்தியாகங்கள் என்பது மிகவேதனையானது. எல்லா வேதனைகளையும் எல்லோரும் பகிர்ந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் வேதனை குறையும்.  60 ஆண்டுகளாக கியூபா மீது அமெரிக்கா தடைவிதித்துள்ளது. ஆனால் நாங்கள் தளரவில்லை; தோற்கவில்லை. கியூபா மக்கள்  ஒன்றுபட்டு உறுதியுடன் நிற்கிறார்கள். அதுதான் நமது சக்தி. நானொரு குழந்தைகள் மருத்துவர். என்  மருத்துவமனையில் எட்டு மாதங்களே ஆன ஒரு குழந்தைக்கு மருந்து வேண்டும். அமெரிக்கா விலிருந்து அந்த மருந்து வரவேண்டும். வாங்குவ தற்குப் பணம் உள்ளது. ஆனால் அமெரிக்கா வின் தடை காரணமாக அந்தக் குழந்தைக்கு மருந்து கிடைக்கவில்லை...குழந்தை இறந்து விட்டது. நாங்கள் நுரையீரல் புற்றுநோய்க்கு இப்போது மருந்து கண்டுபிடித்துவிட்டோம். கியூபாவின் ஹோம்சமார்த்தி என்ற புரட்சியாளராகிய கவிஞர் சொல்லியிருந்தார், உங்களிடம் அறிவாற்றல் இருப்பதால்தான் நீங்கள் மற்றவரின் அறிவாற்றலை அறிய முடிகிறது என்று. என் தந்தையை நீங்கள் நேசிப்பது உங்களின் நட்பையும் அறிவாற்றலையும் காட்டுகிறது’ - என்றார் டாக்டர் அலைடா. கண்ணூர் மக்கள் தமக்கு வழங்கியது அற்புதமான வரவேற்பு என்று மிகுந்த ஆச்சரி யப்பட்டார். அவர் அமர்ந்திருந்த மேடையில் கட்சித் தியாகிகளின் மனைவிமார்களும், குடும்பத்தினரும் இருந்தனர். இது ஓர் உணர்ச்சிமயமான காட்சியும் அனுபவமுமாகும். தொடர்ந்து அவர் பேசுகையில், ‘மற்ற நாடுகளுக்குச் செல்வதென்றால் அவர்களுக்குக் கல்வி வேண்டும். கியூபாவிலிருந்து புரட்சியா ளர்கள் நிகரகுவாவுக்குச் சென்றது கல்வியின் மூலம்தான். கல்வியிலிருந்தும் புரட்சி உண்டா கும். கியூபாவில் எல்லாம் சரியாக உள்ளதென்று நான் கருதவில்லை. அதேசமயம், எங்களைச் சுற்றி ஆபத்தான தடைவளையம் போட்டுள்ள அமெரிக்காவை எதிர்த்து நாங்கள் அதிகபட்சம் போராடுகிறோம்; உறுதியாகப் பிடித்து நிற்கி றோம்’ - என்றார் டாக்டர் அலைடா.

ஆகஸ்ட் 1 அன்று சேகுவேராவின் மகள் டாக்டர் அலைடா பங்கேற்ற கண்ணூர் நிகழ்ச்சி குறித்து மலையாள நாளேடு மாத்ருபூமி (2.8.2019) ெளியிட்டுள்ள செய்திக் கட்டுரை இது. 
எழுதியவர்: தினகரன் கொம்பிலாத்து.
தமிழில்: தி.வரதராசன்