செவிலியர் பயிற்சி கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு (பிஎஸ்சி நர்சிங்) முதலாம் ஆண்டு மாணவர்கள் பிளாரன்ஸ் நைட்டிங்கேலை கவுரவிக்கும் வகையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.ஜெயந்தி தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டு தங்களது பணியினை தொடர்ந்தனர். இதில் துணை முதல்வர் கே.பாஸ்கரன், செவிலியர் கல்லூரி முதல்வர் ஏ.தாஹிரா பேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.