அரசு ஊழியர்களை, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும் புதிய மென்பொருள் கட்டமைப்பை முழுமையாக செய்து முடிக்கும் வரை பழைய முறையிலேயே சம்பளப் பட்டியல் தயாரித்து ஊதியம் வழங்க வேண்டும், விப்ரோ நிறுவனத்திற்கு தரப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் வெள்ளியன்று (ஜூன் 7) தமிழகம் முழுவதும் சார்நிலை கருவூல அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனையொட்டி தாம்பரம் சார்நிலை கருவூல அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் டேனியல் ஜெயசிங் பேசினார்.