சென்னை, ஜூன் 7- குடிசைமாற்று வாரிய குடியிருப்பை பயனாளிகளுக்கு ஒதுக்கக் கோரி ஜூன் 12 அன்று அனைத்துக் கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. கே.பி.பார்க்கில் உள்ள பழுதடைந்த குடி சைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு இடித்துவிட்டு, புதிதாக 864 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. குடியிருப்பு இடிக்கப்பட்ட நேரத்தில், அங்கிருந்த மக்க ளுக்கு அருகில் உள்ள மைதானத்தில் 100சதுர அடி பரப்பில் தற்காலிக கொட்டகை அமைத்து தரப்பட்டது. குடியிருப்புகள் கட்டியுள்ள நிலையில், ஒதுக்கீட்டு ஆணை வைத்துள்ளவர்களுக்கு அரசு வீட்டை வழங்காமல் உள்ளது. மாறாக, அந்த குடியிருப்பு முழுவதையும் கொரோனா தனிமைப்படுத்தும் சிகிச்சை மையமாக மாற்றியுள்ளது. இதற்கு அங்குள்ள அரசி யல் கட்சிகளும், மக்களும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 4ந் தேதி அந்த பகுதி யில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிபிஎம் எழும்பூர் பகுதிச் செயலாளர் முருகன் மற்றும் ஆறுமுகம், அன்பு, வி.சரவணன் மற்றும் கலிங்கராஜன் (அதிமுக), மண்வீரன் (விசிக), அருள்தாஸ் (திக), அய்யனா (தமிழ்தேசிய கட்சி), மகேந்தி ரன் (ஸ்போர்ட்ஸ் கிளப்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இந்தக்கூட்டத்தில், குறைந்தபட்சம், தற்காலிக கொட்டகையில் தங்கியுள்ள 200 பேருக்காவது உடனடியாக வீட்டை ஒப்ப டைக்க வலியுறுத்தி ஜூன் 12 அன்று மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.