tamilnadu

மின் வாகனங்களுக்கான பேட்டரிகள் தரம் சோதிப்பதில்லை இந்திய தரக்கவுன்சில் நிர்வாகி தகவல்

சென்னை, டிச.16- மின்சார வாகனங்க ளுக்கான வெளிநாட்டில் இருந்த இறக்குமதி செய்யப்படும் பேட்டரிகள் இன்னும் இந்தியாவில் சோதித்து தரச்சான்று அளிக்கப்படவில்லை என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சக த்தினால் அமைக்கப்பட்ட தன்னாட்சி அமைப்பான இந்திய தரக்கவுன்சில் பொதுச் செயலாளர் ஆர்.பி.சிங் கூறியுள்ளார். சென்னையில் நடை பெற்ற ஆய்வகங்களின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் செய்தி யாளர்களிடம் அவர் கூறிய தாவது: நாட்டின் பலபகுதிகளில் ஏராளமான ஆய்வகங்கள் உள்ளன. இவற்றில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வங்கள் அங்கீகாரம் பெற்றவை. பொருட்களை பரிசோதித்தல், ஆய்வ கங்களில் பயன்படுத்தப்ப டும் சாதனங்களின் தரத்தை உறுதிப்படுத்தி சான்று அளித்தல் உள்ளிட்ட பணிகளை  தேசிய அங்கீகார வாரியம் (என்ஏபிஎல்) செய்கிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியா கும் எந்த பொருளும் என்ஏபியால் அங்கீகரிக்கப்பட்டிருக்கவேண்டும். அப்படி இருந்தால் தான்  அது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படும். இதனால் இந்தியாவில் உள்ள ஆய்வகங்கள் சிறப்பான பணிகளை செய்து வருகின்றன. இதனால் உலக சந்தையில்இந்திய பொருட்கள் போட்டி போடக்கூடிய நிலையை இவை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் விற்கப்ப டும் பொருட்களுக்கு கட்டாயம் ஐஎஸ்ஐ அவ சியம். என்ஏபி அங்கீகாரம் என்பது வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கு அவசியம். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் வெளிநாடுகளில் இந்திய நிறுவனங்கள் அளிக்கும் சேவை ஆகிய வற்றுக்கு  ஐஎஸ்ஓ 17025 தரச்சான்றிதழ் விதிமுறை களை பின்பற்றவேண்டும்.  ரத்தம். கான்கீரிட், தண்ணீர், இயந்திரம், உள்பட பல பரிசோதனைகள் இதில் உள்ளன. மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கரவாகனங்களுக்கு இன்னும் ஆய்வகம் தொடங்கப்படவில்லை. மேலும் வெளிநாடுகளில் இருந்து அந்த வாகனத்திற்கு இறக்குமதி செய்யப்படும் பேட்டரிகளின் தரம் இன்னும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வில்லை. இதற்கு விதி முறைகள் உருவாக்கப்பட வேண்டும். இந்த பிரச்சனை கள் குறித்து சென்னை மாநாட்டில் விவாதிக்க ப்பட்டது என்றார் என்.பி.சிங்.