அசத்தும் காஞ்சிபுரம் நகராட்சி நிர்வாகம்
காஞ்சிபுரம்,டிச.14- காஞ்சிபுரம் நகரத்தை ‘குப்பை யில்லாத... குப்பை தொட்டி இல்லாத...’ நகரமாக மாற்றுவதற்கு நகராட்சி ஆணை யர் மகேஸ்வரி தலைமையிலான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் நகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் குப்பை கொட்டும் இடங்களை கண்டறிந்து, அங்கு ‘வண்ண வண்ண கோலங்கள்’ இட்டு குப்பைகளை கீழே கொட்டக்கூடாது என எழுதி துப்புரவு பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் வீடு, வீடாக சென்று பொது மக்களிடமிருந்து மக்கும், மக்காத குப்பையை தரம் பிரித்து வாங்கி வருகின்ற னர். இவ்வாறு பெறப்படும் குப்பைகள் கிடங்கில் சேகரிக்கப்பட்டு, உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த உரங்கள் விவ சாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகளில் பாலித்தீன் பைகளின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், குப்பைகளை தரம் பிரித்து மக்கும், மக்காத குப்பை என்ற வகையில் துப்புரவு பணியாளர் இடம் வழங்க வேண்டும் என்பது குறித்து மாண வர்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி களையும் நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது. இந்நிகழ்ச்சிகளில், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, பொறியாளர் மகேந்திரன், சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன், துப்புரவு பணியாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.