வேலூர், ஜூன் 3-குடியாத்தம் அருகே மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அணங்காநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் அனேஷ்குமார். வாத்தியார்பட்டி பகுதியில் உள்ள பாலாற்றில் மர்ம நபர்கள் மணல் எடுப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அனேஷ்குமார், அவரது உதவியாளர்கள் கணேசன், பெருமாள் ஆகியோருடன் அங்கு சென்றார்.அப்போது மணல் எடுத்துக் கொண்டிருந்தவர்கள் அனேஷ்குமாரை தாக்கிவிட்டு டிராக்டரை எடுத்துச் செல்ல முயன்றனர். மேலும், டிராக்டரில் ஏறிய அனேஷ்குமாரை மாதனூர் பகுதியில் தாக்கி கீழே தள்ளிவிட்டு, அவரிடம் இருந்த செல்லிடப்பேசியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து அனேஷ்குமார் குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.