tamilnadu

img

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் முதியோர்களுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி

சென்னை, அக். 2- உலக முதியோர் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 1ஆம் தேதி கொண்டாடப்படு கிறது. சென்னை மருத்துவக் கல்லூரியில் முதியோர் மருத்துவப் பிரிவு பத்ம ஸ்ரீமருத்துவர் வி.எஸ்.நடராஜன் 1978ஆம் ஆண்டு வெளி நோயாளிகள் பிரிவாக தொடங்கப்பட்டு இன்று உள்நோயாளிகள் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசால் தேசிய முதியோர் சுகாதார பராமரிப்பு திட்டத்தின் கீழ் இந்த முதியோர் மருத்து வத்துறையானது மண்டல முதியோர் மையமாக 2012 ஆம் ஆண்டு தரம் உயர்த்த ப்பட்டது. முதியோர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறை வாக இருப்பதால் தொற்று நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அவற்றை தடுக்க ஃப்ளூ நிமோனியா போன்ற தடுப்பூசிகள் உலக அளவில் சிடிசி நிறுவனத்தால் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த ஆண்டிலிருந்து முதியோர்களுக்கு நிமோனியா தடுப்பூசி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது வாழ்நாளில் ஒருமுறை போடப்பட வேண்டும். சுமார் 4,000 ரூபாய் மதிப்புள்ள இந்த தடுப்பூசி முதியோர்க ளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. முதி யோர்கள் ஒருநாள் உள்நோ யாளியாக அனுமதிக்க ப்பட்டு தடுப்பூசி போடப்படு கிறது. இதனால் முதி யோர்களுக்கு நோய் தொற்றினால் ஏறப்பட க்கூடிய பாதிப்புகளும் இறப்பு விகிதமும் குறைய ஏதுவாக இருக்கும். மேலும் உலக முதி யோர் தினத்தை முன்னிட்டு சென்னை மருத்து வக்கல்லூரி மண்டல முதி யோர் மையத்தில் முதியோரு க்கான தடுப்பூசி மற்றும் யோகா சேவை மையம் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவ்வாயன்று (அக். 1) ஆரம்பிக்கப்பட்டது. இந்த முதியோருக்கான தடுப்பூசி சேவை பிரதி வாரம் புதன் கிழமையும், யோகா சேவை பிரதி வாரம் வியா ழக்கிழமையும் செயல்படும்.  இதில் முதல்வர் ஆர்.ஜெயந்தி, கண்காணிப்பாளர் கே.நாராயணசாமி, துணை கண்காணிப்பாளர் மருத்து வர் எஸ்.ரகுநந்தனன், மருத்து வர் ஜி.எஸ்.சாந்தி, முதி யோர் மருத்துவத்துறை பேராசிரியர் ஜி.உஷா  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.