தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிக்குக் கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கனவே 6 கட்டங்கள் முடிந்த நிலையில், வரும் ஜூன் 1-ஆம் தேதி 7-ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிக்குக் கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் 5-20 பேர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.