tamilnadu

சென்னை , செங்குன்றம் முக்கிய செய்திகள்

கஞ்சா விற்ற 4 பேர் கைது

செங்குன்றம்,நவ.18- செங்குன்றத்தை அடுத்த தண்டல் கழனி என்ற இடத்தில் பேருந்து நிலை யத்தில் சிலர் கஞ்சா விற்ப தாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து செங்குன்றம் காவல்துறை ஆய்வாளர் ஜவகர் பீட்டர் மற்றும் காவ லர்கள் அங்கு சென்றனர். சந்தேகப்படும் படிநின்றி ருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் செங்குன்றத்தை சேர்ந்த சேகர், கலீல், பட்டாபிராமை சேர்ந்த அரவிந்த், லியோ பாட்சா என தெரியவந்தது. இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சிறு பொட்டலங்களாக்கி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் விற்று வந்ததாகக் கூறினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களி டம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஆவடியில் சாலையை சீரமைக்க கோரி போராட்டம்

ஆவடி,நவ.18-  ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட சரஸ்வதி நகரில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். மழை பெய்யும் போது சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் குட்டையாக தேங்கி நிற்கிறது. இதையடுத்து சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் ஆவடி மாநகரட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சரஸ்வதி நகர் குடியிருப்பு பொது நலச்சங்கம் சார்பில் ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து சங்கத் தலைவர் பொன்னுசாமி தலைமையில் திங்களன்று (நவ.18)  உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறி அப்பகுதி மக்கள் பெண்கள் உள்பட சுமார் 70 பேர் ஒன்று கூடினர். இது பற்றி தகவல்அறிந்ததும் ஆவடி காவல்துறை ஆய்வாளர் காளிராஜ் மற்றும் ஆவடி மாநகராட்சி பொறி யாளர் வைத்தியநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலையை சரி செய்வதாக உறுதி அளித்தனர்.

சூதாடிய  8 பேர் கைது

ஊத்துக்கோட்டை, நவ.18- ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரை குப்பம் கிராம எல்லையில் உள்ள மாந்தோப்பில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.இதனைத் தொடர்ந்து காவல்துறையி னர் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது காவல்துறையை கண்டதும் சூதாடிக் கொண்டிருந்த 8 பேர் தப்பி ஓட முயற்சித்தனர். அவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 சொகுசு கார்கள், ரூ. 40 ஆயிரம் பணம், 52 சீட்டு கட்டுகள் ஆகியவை பறி முதல் செய்யப்பட்டது.

பரஸ்பரநிதி அண்ணா நகர் கிளை அலுவலகம் இடமாற்றம்

சென்னை,நவ.18- ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் அண்ணாநகர் கிளை தற்பே?து முதலாவது தளம், விங்க் ஏ, கிம்பர்லி டவர்ஸ், 222, 2-ஆவது அவென்யூ, அண்ணா நகர், சென்னை – 600 040 என்ற முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கிளையை வேல்யூ இன்வெஸ்ட் வெல்த் மேனேஜ்மென்ட் இயக்குநர்  பி.வி.ஆர். வெங்கடேஷ் பாபு  அண்மையில் திறந்து வைத்தார்.  தென் மண்டல பிரிவுத் தலைவர் திரு. ஹரீஷ் ஷங்கர், தமிழக மண்டலத் தலைவர்  ஜீவன் கோஷி ஆகியோர் உடனிருந்தனர். இந்த நிகழ்ச்சியின்போது  ஹரீஷ் ஷங்கர்  கூறுகையில், “எங்களின் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கி, தொடர்ந்து வளர்ச்சி காண இப்புதிய அலுவலகம் பேருதவியாக இருக்கும். இது, உள்ளூர் சந்தையை மேலும் விரிவாக்கும் எங்களின் நீண்டகால உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக உள்ளது என்றார்.