tamilnadu

img

புதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

சென்னை,செப்.29- தமிழக அமைச்சரவையில் புதிதாக அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்ட 4 பேருக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், துறை மாற்றப்பட்ட அமைச்சர்கள் மற்றும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள், ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்,ரவி முன்னிலையில் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்த விழாவில் புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கு புதிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை, இரா.ராஜேந்திரன்- சுற்றுலாத்துறை,கோ.வி.செழியன்- உயர் கல்வித்துறை, சா.மு. நாசர்- சிறுபான்மை நலத்துறை ஆகிய துறைகள் வழங்கப்பட்டுள்ளது.