காஞ்சிபுரம், ஜூலை 19- அத்திவரதர் திருவிழா நிகழ்ச்சியில் வெள்ளியன்று (ஜூலை 19) கூட்ட நெரிசலில் சிக்கி, சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (70) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். வியாழனன்று (ஜூலை 18) கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். அதேபோல், கடந்த ஜூலை 3 ஆம் தேதி அன்று ஆந்திராவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சக்தி ஆகாஷ் காவல்துறையினர் தாக்கியதாலும், டாடா மேஜிக் ஓட்டுனர் குமார் வாகனத்தை இயக்க காவல்துறை அனுமதி மறுத்ததை கண்டித்து தீக்குளித்து இறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.