tamilnadu

தாம்பரம் - காஞ்சிபுரத்துக்கு ஏ.சி. பேருந்து

 தாம்பரம்,நவ.27- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பேருந்து பயணம் என்பது பயணி களுக்கு மிகவும் சவாலான தாகவே உள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கிப் படாத பாடுபட்டு செல்கிறார்கள். இந்நிலையில் தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக புதிதாக ஏ.சி. பேருந்து (எண் 55) கடந்த வாரம் முதல் இயக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் கோட்டம் சார்பில் இயக்கப்படும் இந்த பேருந்து ஒரகடம் வழியாக செல்கிறது. இந்த சொகுசு பேருந்து பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் குறைந்த பட்சம் ரூ.30, அதிகபட்சமாக ரூ.75 கட்டணமாக வசூலிக்கப்படு கிறது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை இப்பேருந்து இயக்கப்படுகிறது. பெருங்களத்தூர், படப்பை, ஒரகடம், வாரணவாசி, வாலாஜாபாத் ஆகிய 5 இடங்களில் மட்டும் நின்று செல்கிறது.