tamilnadu

கொரோனா நோயாளிகள் 796 பேர் முகாமுக்கு மாற்றம் 176 பேருக்கு வீட்டிலேயே சிகிச்சை

சென்னை, மே 9 - கொரோனா தொற்றுக்கு உள்ள சென்னை அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வந்த 796 பேர் முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சென்னையில் மே 8 நிலவரப்படி 3ஆயிரத்து 43 பேர் பாதிக்  கப்பட்டு 374 பேர் குணமடைந்துள்ளனர். 2644 பேர் சிகிச்சை  பெற்று வருகின்றனர். இவர்களில் சுமார் 80 விழுக்காட்டி னருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறியே இல்லை. எனவே, அதிகளவு தொற்று பரவி வரும் சூழலில், புதித காக வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக,  தொற்று அறிகுறி இல்லாதவர்கள் தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றறனர். அதன்படி 796 பேர் தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து 216 பேர் வேலம்  மாள் பொறியியல் கல்லூரி முகாமிற்கும், 164 பேர் டிஜி வைஷ்ணவா கல்லூரி முகாமுக்கும்,  மாற்றப்பட்டுள்ளனர். ராஜூவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து  382 பேர் நந்தம்பாக்கம் வர்த்தக மைய முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருந்த 24 பேர் கிண்டி யில் உள்ள தேசிய திறன்பயிற்சி நிறுவன முகாமிற்கும் மாற்றப்பட்டனர். ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 96 பேர் லயோலா கல்லூரி முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் 86 பேரும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருந்து 90 பேரும் என 176பேர் தங்களை தாங்களே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்வதாக கூறி சென்று விட்டனர்.