tamilnadu

img

பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீது மேலும் 3 மாணவிகள்  புகார்....

சென்னை:
பாலியல் சீண்டல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.  சென்னையில் தனியார் பள்ளியான பத்மசேஷாத்ரி பாலபவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் ஆன்-லைன் வழி வகுப்புகள் எடுக்கும் போது பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்டார். இதுதொடர்பான புகாரின் பேரில் கைதான ராஜகோபாலன் ஜுன் 8 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்
பட்டுள்ளார்.  இந்த நிலையில் ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக இரண்டு சாட்சிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து  பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது புகார் அளித்த மாணவிகளின் எண்ணிக்கை 5 பேராக உயர்ந்துள்ளது.