tamilnadu

img

15 கிராமங்கள் பாலைவனமாகும் அபாயம்

கிராம மக்கள்-சிபிஎம் கோரிக்கை 


சிவகங்கை, ஜூலை 7- சிவகங்கை மாவட்டம் மானா மதுரை தாலுகா  வேதியரேந்தல் குரூப்பில் வைகை கரையோரம் மணல் அள்ளுவதால் 15 கிராமங்கள் பாலை வனமாகும் சூழ்நிலையை தடுத்து நிறுத்திட மணல் குவாரி அமைக்கும் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும், கிராம மக்களும் மனு கொடுத்து மாவட்ட ஆட்சியரிடமும்,வட்டாட்சியரிடமும்  கேட்டுக் கொண்டுள்ளனர். வேதியரேந்தல் கிராமத்தில் பட்டா எண் 610ல் சுமார் 15 ஏக்கர் புஞ்சை நிலத்தில் வைகை ஆற்றுஅருகே  தனி யார் மணல் அள்ள அனுமதிக்கப் பட்டுள்ளன.வேதியரேந்தல் பகுதியில் 150 குடியிருப்புகள் உள்ளன.300 ஏக்கர் விவசாய நிலமாகும்.மணல் அள்ளும் பகுதியிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் வைகை ஆற்றில்  கூட்டுக் குடிநீர் திட் டம் உள்ளது.இந்த குடிநீர் திட்டத்திலி ருந்து சூடியூர், ஏனாதிக்கோட்டை, செங்கோட்டை ஆகிய கிராமங்கள் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு குடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இப்பகுதியில் தனியார் மணல் குவாரி அமைப்பதற்கான பணி  வைகை ஆற்று இடது பிரதான கால்வாய் கரை யிலும், கரையை முறித்தும் பாதை அமைக்கும் பணி நடந்துவருகிறது.இத்தகவலை வட்டாட்சியர், பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு விவ சாயிகள்  தெரிவித்தனர்.மணல் குவாரி அமைப்பது தொடர்பான தகவல் தெரி யாது என வட்டாட்சியர் ,பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்ததாக விவ சாயிகள் கூறினர். இதன்பின்பு  குவாரி அமைக்கும் இடத்திற்கு செல்கிற பாதை அமைக்கும் பணியை கிராம மக் கள் தடுத்து நிறுத்தினர். இத் தகவல் கிடைத்து கிராம நிர் வாக அலுவலர் முனியசாமி வந்து தடுத்து நிறுத்தினார். வட்டாட்சியருக்கோ,பொதுப்பணித்துறை அதி காரிகளுக்கோ தெரிவிக்கப்படாமலே உயர் அதிகாரிகள் இதற்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள் என்கிற தக வலை வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆண்டி கூறும் போது, மேலநெட்டூர் உள்ளிட்ட ஆலம்பச்சேரி ,தெ.புதுக்கோட்டை ஆகிய கண்மாய்களுக்கு செல்கிற கால்வாய் கரைகளை  முறித்து பாதை அமைக்கும் பணி நடந்துவந்தது.கால்வாய் கரையின்மேலே  பாதை அமைக்கும் பணியும் நடந்தது.இச் செயல்குறித்து வட்டாட்சியருக்கோ, பொதுப்பணித்துறை அதிகாரி களுக்கோ தெரியாது என்றார்கள். சென்னையிலிருந்து உத்தரவுவாங்கி வந்து மணல் அள்ளுகிறார்கள் என்கிற தகவல் கிடைத்தது.                                             குவாரி மணல் அள்ளினால் வேதிய ரேந்தல் உள்ளிட்ட 15கிராமங்கள் பாலைவனமாக மாறும் நிலை உள்ளது. இப்பகுதி விவசாயிகள் நலன் கருதி குவாரிக்கு அனுமதி கொடுக்கா மல் தடுத்திட வேண்டியும்,  கிரா மத்தின் சார்பாக செல்லம், குருசாமி, மலைக்கண் ,வேட்டையர், கருப் பையா, பொன்னழகு ஆகியோர் உள்ளிட்டோர் ஏராளமானோர் மானாமதுரை வட்டாட்சியரையும், ஆட்சியரையும் சந்தித்து மனு கொடுத்து பேசினோம்..அப்போது குவாரி அமைக்கும் விபரமே எனக்கு தெரியாது என வட்டாட்சியர் தெரி வித்தார்.  மானாமதுரை பொதுப்பணித்துறை பொறியாளர் சுரேஷிடம் கேட்டதற்கு அது எங்கள் பகுதியில்லையென ஒரே வார்த்தையில்முடித்துக் கொண்டார்.எஸ்டிஒ ரமேஷிடம் கேட்டதற்கு அவ ரும் எங்கள் எல்கை கிடையாது என் றும், பரமக்குடி பொதுப்பணித்துறை எஸ்டிஒ மலர்விழிஅதிகாரியின் பொறுப்பு என்றார்.பரமக்குடி அதி காரியின் கைபேசி எண் கேட்டதற்கு அவர் கொடுத்தார்.பரமக்குடி எஸ்டிஒ மலர்விழி கைபேசி எண் கொடுத்தார்.அவரிடம் தகவல் சொன்னேன்.அவர் ஏஇபிரபுவிடம் பேசுங்கள் என்று சொன்னார். ஏஇ பிரபுவிடம் பேசினேன்.கால்வாயை முறித்து பாதை அமைத்தது சட்ட விரோதமாகும்.நோட்டீஸ் அனுப்பி யுள்ளோம்.சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றார்.நடவடிக்கை எடுப்பதற்கு வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்துள்ளோம் என்று பொறியாளர் பிரபு கூறினார். இவ்வாறு ஆண்டி தெரிவித்தார்.